உலகம்

பாகிஸ்தான் குருத்வாராவுக்கு செல்ல இந்திய தூதருக்கு அனுமதி மறுப்பு

பாகிஸ்தானில் உள்ள குருத்வாராவில் அந்நாட்டுக்கான இந்திய தூதர் அஜய் பிஸாரா நுழைய சனிக்கிழமை அனுமதி மறுக்கப்பட்டது.

ENS

பாகிஸ்தானில் உள்ள குருத்வாராவில் அந்நாட்டுக்கான இந்திய தூதர் அஜய் பிஸாரா நுழைய சனிக்கிழமை அனுமதி மறுக்கப்பட்டது.

பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதராக அஜய் பிஸாரா செயல்பட்டு வருகிறார். இவர் அங்குள்ள ஹசன் அப்தல் எனுமிடத்தில் அமைந்திருக்கும் பஞ்ச சாஹிப் குருத்வாராவுக்குச் செல்ல முறைப்படி அனுமதி பெற்றார்.

இந்நிலையில், குருத்வாராவுக்குச் செல்ல அஜய் பிஸாராவுக்கு திடீரென அனுமதி மறுக்கப்பட்டது. அவரை அங்கிருந்த அதிகாரிகள் உள்நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினர்.

முன்னதாக, பைஸாகி எனும் சீக்கிய பண்டிகையை முன்னிட்டு பாகிஸ்தானில் உள்ள புகழ்பெற்ற குருத்வாராவுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, யாத்திரை சென்ற இந்தியர்களை ஒருங்கிணைக்கும் விதமாக அங்கிருந்த இந்திய தூதரக அதிகாரிகள் சென்றபோதும் இதேபோன்று அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொகுதிப் பங்கீடு: திமுக - மனிதநேய மக்கள் கட்சி பேச்சுவார்த்தை தொடக்கம்

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

SCROLL FOR NEXT