இந்தோனேசியா: விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிப்பு
இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளான லையன் ஏர் விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜகார்த்தா: இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளான லையன் ஏர் விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசியாவின் போக்குவரத்துத் துறை அமைச்சக பேச்சாளர் இதனை உறுதி செய்துள்ளார்.
இந்தோனேசியாவில் லையன் ஏர் விமானம் கடந்த திங்கட்கிழமை காலை ஜாவா கடற்பரப்பில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த 189 பேரும் பலியானதாக அறிவிக்கப்பட்டது.
போயிங் விமானத்தின் விமானிகள் கடைசி நேரத்தில் என்னென்ன பேசிக் கொண்டனர், விமானத்துக்கு என்ன நேர்ந்தது என்பது போன்ற விஷயங்களை கறுப்புப் பெட்டியில் பதிவாகியிருக்கும் தகவல்களைக் கொண்டே அறிய முடியும்.
விமான விபத்துகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டிருப்பது குறப்பிடத்தக்கது.