உலகம்

இந்தியாவின் மிஷன் சக்தியால் சர்வதேச விண்வெளி மையத்துக்கு ஆபத்து: கதறும் நாசா

விண்வெளியில் இருந்த செயற்கைக் கோளை இந்தியா தாக்கி அழித்தது மிக மோசமான சம்பவம் என்று வர்ணித்திருக்கும் நாசா, இதனால் சர்வதேச விண்வெளி மையத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக நாசா கூறியுள்ளது.

ENS


வாஷிங்டன்: விண்வெளியில் இருந்த செயற்கைக் கோளை இந்தியா தாக்கி அழித்தது மிக மோசமான சம்பவம் என்று வர்ணித்திருக்கும் நாசா, இதனால் சர்வதேச விண்வெளி மையத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக நாசா கூறியுள்ளது.

இந்தியா தாக்கி அழித்த செயற்கைக் கோள் தற்போது 400 துண்டுகளாகச் சிதறி, விண்வெளியில் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன. இது சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் மோதி சேதம் ஏற்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளதாக நாசா கூறுகிறது.

நாசா நிர்வாகி ஜிம் பிரிடென்ஸ்டைன் கூறுகையில், இதுவரை 60 துண்டுகள் எங்கெங்கே சிதறிக் கிடக்கிறது என்பதை கண்டுபிடித்துள்ளோம். இது மிகவும் மோசமான விஷயம். சர்வதேச விண்வெளி மையத்தின் மீது இந்த துண்டுகள் அல்லது துகள்கள் பயணிப்பது மிக மோசமான நிலையை ஏற்படுத்தும்.

இந்தியா பரிசோதித்த ஏசாட் சோதனையால், இந்திய செயற்கைக் கோளை தாக்கவிருந்த செயற்கைக் கோள் தாக்கி அழிக்கப்பட்டு தற்போது 400 துண்டுகளாக விண்வெளியில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

தற்போது வரை அவற்றை கண்டறியும் பணியில் நாசா ஈடுபட்டுள்ளது. தற்போதுள்ள தொழில்நுட்ப உதவியுடன் 10 செ.மீ. மற்றும் அதற்கு மேல் இருக்கும் துண்டுகளை மட்டுமே கண்டுபிடிக்க முடியும். தற்போது வரை 60 துண்டுகளைக் கண்டுபிடித்துள்ளோம். அதில் 24 துண்டுகள் விண்வெளி ஆய்வு மையத்துக்கு ஆபத்தான வகையில் பயணித்து வருகிறது என்றார்.

இதுபோல ஒரு நாடு செய்தால், பிற நாடுகளும் இதை முயற்சித்துப் பார்க்கும். இதனை ஏற்றுக் கொள்ளவே முடியாது. இதனால் நாசாவுக்கு ஏற்படும் பாதிப்பு விஷயத்தில் நாங்கள் தெளிவாக இருக்க வேண்டியது இருக்கிறது. இதுபோன்ற விஷயங்கள் குறித்து நாசா ஒவ்வொரு மணி நேரமும் புதிது புதிதாக பல விஷயங்களைக் கற்றுக் கொண்டே வர வேண்டிய நிலையும் உள்ளது. இந்தியாவின் மிஷன் சக்தி திட்டத்தால், நாசாவுக்கான ஆபத்து அளவு தற்பொழுது 44% ஆக உயர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வினா - விடை வங்கி... சிந்துவெளி நாகரிகம்!

கருணைத் தொகை ரூ. 10,000 - உதவித் தொகை என பெயர் மாற்றம்!

ஹெட்மேயர் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சொத்து: சாய் ஹோப்

சூப்பர் 8 சுற்று: இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங்!

பேரவைத் தேர்தல் : அதிமுகவிடம் 35 தொகுதிகளைக் கேட்கும் பாஜக?

SCROLL FOR NEXT