அரசுப் படைகளுடன் மோதல்: ஆப்கனில் 99 பயங்கரவாதிகள் பலி
ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுடன் ஐந்து நாட்களாக தொடந்து வரும் மோதலில் இதுவரை 99 பயங்கரவாதிகள் பலியாகியுள்ளனர்.
காபூல்: ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுடன் ஐந்து நாட்களாக தொடந்து வரும் மோதலில் இதுவரை 99 பயங்கரவாதிகள் பலியாகியுள்ளனர்.
இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத்துறை அறிக்கையை மேற்கோள் காட்டி எல்ப் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஆப்கானிஸ்தானின் பத்கிஸ் மாகாணத்தில் உள்ள பால முர்காப் மாவட்டத்தை மையமாக வைத்து கடந்த ஐந்து நாட்களாக ஆப்கன் அரசுப் படைகளுக்கும் தாலிபான் தீவிரவாதிகளாக்கும் கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது.
அதில் இதுவரை 99 பயங்கரவாதிகளும், 12 அரசுப் படையினரும் மரணமடைந்துள்ளனர். மேலும் 25 படையினரும், 34 பயங்கரவாதிகளும் படுகாயமடைந்துள்ளனர்.