நேபாளத்தில் புதன்கிழமை காலை அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து இஎம்எஸ்சி தெரிவித்ததாவது,
முதலில் காலை 6:14 மணியளவில் காத்மாண்டுவில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
பின்னர் இதனைத் தொடர்ந்து தாடிங் மாவட்டத்திலுள்ள நௌபைஸ் எனுமிடத்தில் காலை 6:29 மணியளவில் 5.2 ரிக்டர் அளவிலும், காலை 6:40 மணியளவில் 4.3 ரிக்டர் அளவிலும் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது என்றிருந்தது.
இதனால் மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர். மேலும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.