உலகம்

காஷ்மீர் சர்ச்சை: தூதரை திரும்ப அழைக்க பாகிஸ்தான் திட்டம்? 

காஷ்மீர் சர்ச்சை காரணமாக இந்தியாவுக்கான தூதரை திரும்ப அழைக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

DIN

இஸ்லாமாபாத்: காஷ்மீர் சர்ச்சை காரணமாக இந்தியாவுக்கான தூதரை திரும்ப அழைக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அரசமைப்புச் சட்டப்பிரிவு 370-ன் வழியாக காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு உள்ள சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதுடன், அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வழி செய்யும் மசோதாக்கள் மத்திய அரசால், மாநிலங்களவையில் திங்களன்று நிறைவேற்றப்பட்டுள்ளன. இதன் காரணமாக பாகிஸ்தானிலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் காஷ்மீர் சர்ச்சை காரணமாக இந்தியாவுக்கான தூதரை திரும்ப அழைக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவுக்காக நியமிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் தூதர் தற்போது பாகிஸ்தானில்தான் உள்ளார். அவர் வரும் 16-ஆம் தேதிதான் பதவியேற்க உள்ளார். எனவே தற்போது பொறுப்பு தூதராக உள்ள மூத்த அதிகாரியை பாக்சிதானுக்கு திரும்ப அழைப்பது என்று அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக ஆட்சியில் புதிதாக ஒரு மருத்துவக் கல்லூரிகூட தொடங்கவில்லை: எடப்பாடி கே.பழனிசாமி

புத்தகத் திருவிழாக்கள் அறிவாா்ந்த சமூகத்தை உருவாக்குகின்றன: த.ஸ்டாலின் குணசேகரன்

காந்திய கொள்கையை கைவிட்டதால் நாடு பின்னடைந்தது: ஆளுநா் ஆா்.என்.ரவி

தமிழகத்துக்கு ரூ.4,144 கோடி நிதி: மத்திய அரசு விடுவிப்பு - தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை தொடக்கம்

தஞ்சையில் அக். 5, 6-இல் இல்லம் தேடி ரேஷன் பொருள்கள் விநியோகம்

SCROLL FOR NEXT