ஆப்கானிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் 100 பயங்கரவாதிகள் அழிப்பு
ஆப்கானிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளின் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளின் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அந்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பயங்கரவாதச் சம்பவங்களின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் மொத்தம் 15 வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட 18 பயங்கரவாத அழிப்பு நடவடிக்கைகளின் அடிப்படையில் 109 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர், 45 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் 5 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனை ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சகம், சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டு உறுதிபடுத்தியுள்ளது. இருப்பினும் அவர்கள் அனைவரும் ஒரே பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களா? எனும் கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டது.