உலகம்

எகிப்து தலைநகரில் ரயில்வே நிலையத்தில் தீ விபத்து: 20 பேர் பலி 

எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள ரயில்வே நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில்,  20 பேர் பலியாகினர். 

DIN

கெய்ரோ: எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள ரயில்வே நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில்,  20 பேர் பலியாகினர். 

எகிப்து தலைநகரான கெய்ரோவில் அமைந்துள்ள ரயில் நிலையம் ஒன்றில், புதன்கிழமை காலை மின்சார ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக பிளாட்பார்மில் உள்ள தடுப்பில் வேகமாக மோதியது. இந்த விபத்தில் ரயிலில் திடீரென தீ பற்றியது.

மளமளவென பரவிய தீயில் சிக்கி 20 பேர் உடல் கருகி பலியாகினர். மேலும், 40க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். 

விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹோட்டல் வருவாய் ரூ.50; ஆனால், ஊழியர்களுக்கு சம்பளம் ரூ.15 லட்சம்! கங்கனா ஆதங்கம்!

முதல்வராக்கிய சசிகலாவை சந்திக்க தைரியம் இருக்கிறதா? - பழனிசாமிக்கு தினகரன் சவால்!

அரசனாக மோகன் லால்! விருஷபா படத்தின் டீசர்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

கடைசி டி20: ஜிம்பாப்வேவை வீழ்த்தி நமீபியா ஆறுதல் வெற்றி!

SCROLL FOR NEXT