உலகம்

விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானம்: இரண்டாவது கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு 

DIN

ஜகார்தா: கடந்த ஆண்டு கடலில் விழுந்து விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் இரண்டாவது கருப்பு பெட்டி தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29-ல்ஆம் தேதியயன்று இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் இருந்து பங்க்கால் பினாங் தீவுக்கு புறப்பட்ட 'லயன் ஏர்' நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் நடுவழியில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 189 பேரும் பலியாகினர். 

சேதமடைந்த விமானத்தின் பாகங்களை மீட்கும் பணி பெரிய அளவில் நடைபெற்று வந்தது. பணி துவங்கிய சில நாட்களில் விமானத்தின் இரண்டு கருப்பு பெட்டிகளில் ஒரு கருப்பு பெட்டி மீட்கப்பட்டது. 

தற்போது இத்தனை நீண்ட தேடலுக்குப் பிறகு இரண்டாவது கருப்பு பெட்டியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆழ் கடலின் 8 மீட்டர் ஆழமான சேற்றில் புதைந்திருந்த கருப்பு பெட்டி தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் விமானத்தின் முதன்மையான பாகங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. என்று தேடுதல் குழு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT