உலகம்

பயங்கரவாதிகள் - ராணுவம் மோதல்: சிரியாவில் 45 பேர் பலி

DIN


சிரியாவில் பயங்கரவாதிகளுக்கும், அரசுப் படையினருக்கும் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சண்டையில் 45 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரமி அப்தெல் ரஹ்மான் கூறியதாவது:
சிரியாவின் வடமேற்கே உள்ள ஹமா மாகாணத்தில், அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள ராணுவ நிலைகள் மீது தெஹ்ரீர் அல்-ஷாம் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்தினர்.
அப்போது நடைபெற்ற சண்டையில் அரசுப் படையைச் சேர்ந்த 14 வீரர்கள் உயிரிழந்தனர்; 31 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ராணுவ நிலைகளைக் கைப்பற்றும் தெஹ்ரீர் அல்-ஷாம் பயங்கரவாதிகளின் முயற்சி முறியடிக்கப்பட்டது என்றார் அவர்.
இந்தத் தகவலை, சிரியா அரசுச் செய்தி நிறுவனமான சனாவும் உறுதி செய்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்க்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT