முகப்பு
உலகம்

கென்யா ஹெலிகாப்டர் விபத்து: விமானி உள்பட 5 பேர் பலி

கென்யாவில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் கென்யா விமானியும், அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 4 பேர் என சம்பவ

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:18 AM
பகிர்:


நைரோபி: கென்யாவில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் கென்யா விமானியும், அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 4 பேர் என சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

கென்யாவின் வடமேற்கு பகுதியில் உள்ள துர்கானா ஏரியின் தீவில் அமைந்துள்ள தேசிய பூங்காவை சுற்றிப்பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். இதற்காக சுற்றுலாப் பயணிகள் ஹெலிகாப்டர்கள் மூலமாக அழைத்து வரப்படுவார்கள்.
 
இந்நிலையில், நேற்று முன்தினம் 2 ஹெலிகாப்டர்கள் சுற்றுலா பயணிகளை அழைத்துக்கொண்டு தேசிய பூங்காவிற்கு வந்தன. அவற்றில் ஒரு ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது, எதிர்பாராதவிதமாக தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. 

இதில், கென்யாவைச் சேர்ந்த விமானி ஒருவரும், அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

ஹெலிகாப்டர் விபத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →