உலகம்

ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே டிசம்பர் மாதம் இந்தியா வருகை!

DIN

இந்தியா, ஜப்பான் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் (ஏசிஎஸ்ஏ) ஏற்படுத்துவது தொடர்பாக ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே டிசம்பர் மாதம் இந்தியா வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

ஜப்பான் பிரதமரின் இந்தியா வருகை டிசம்பர் 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா வருகை தரும் ஜப்பான் பிரதமர் அபே, மணிப்பூர் தலைநகர் இம்பாலில் தங்க உள்ளார். இதன்மூலம் இம்பாலில் தங்கும் முதல் ஜப்பான் பிரதமர் எனும் சிறப்பை பெறவுள்ளார். ஏனெனில் இம்பால், 2-ஆம் உலகப் போரின் போது, ஜப்பானுக்கும் எதிரி நாட்டு கூட்டுப் படைகளுக்குமான போர்க்களமாக இருந்துள்ளது. 

இம்பாலில் நடைபெற்ற போரின் 75-ஆவது ஆண்டு தினத்தை குறிக்கும் விதமாக கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்ட அருங்காட்சியகத்தையும் பார்வையிடுவார், அங்கு அமைதிக்காக நினைவஞ்சலி செலுத்துகிறார். 

இருப்பினும் இந்திய அரசு தரப்பில் இருந்து ஜப்பான் பிரதமர் வருகை, பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தும் இடம் தொடர்பாக எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT