இந்திய துணைத்தூதர் கவுரவ் அலுவாலியா 
உலகம்

எல்லையில் அத்துமீறித் தாக்குதல்: இந்தியத் தூதரை அழைத்துக் கண்டித்த பாகிஸ்தான் 

எல்லையில் அத்துமீறித் தாக்குதல் நடத்தியதாக இந்தியத் தூதரை அழைத்து பாகிஸ்தான் கண்டித்துள்ளது.

DIN

இஸ்லாமாபாத்: எல்லையில் அத்துமீறித் தாக்குதல் நடத்தியதாக இந்தியத் தூதரை அழைத்து பாகிஸ்தான் கண்டித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரை இரண்டாகப் பிரிக்கும் அறிவிப்பினை வெளியிட்டதில் இருந்து எல்லைப் பகுதியில், தீவிரவாதிகளை ஊடுருவ வைக்கும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது. ஆனால் அதை இந்தியா வெற்றிகரமாக முறியடித்து வருகிறது.

இந்நிலையில் எல்லையில் அத்துமீறித் தாக்குதல் நடத்தியதாக இந்தியத் தூதரை அழைத்து பாகிஸ்தான் கண்டித்துள்ளது.

நேசபிர்  மற்றும் பாக்சர் செக்டார்களில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இந்தியா அத்துமீறித் தாக்குதல் நடத்துவதாக பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம் சாட்டியுள்ளது.

குறிப்பாக பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை இந்திய ராணுவம் குறிவைத்து தானியங்கி இயந்திரத் துப்பாக்கிகள் மற்றும் குண்டுகள் மூலமாகத் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது என்று குற்றம் சாட்டியுள்ளது. இந்தியாவின் தாக்குதலில் ஒரு பெண் உயிரிழந்து விட்டதாகவும் மூன்று பேர் காயம் அடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக இந்திய  துணைத்தூதர் கவுரவ் அலுவாலியாவை புதனன்று நேரில் அழைத்து பாகிஸ்தான் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 வாரங்களுக்குப் பிறகு ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை திறப்பு: கனரக வாகனங்களுக்கு அனுமதி!

பிரசாந்த் நீல் படத்துக்காக தோற்றத்தை மாற்றும் ஜூனியர் என்டிஆர்!

மனிதர்களை 2-வது முறை கடிக்கும் தெருநாய்களுக்கு ஆயுள் தண்டனை: உ.பி. அரசு உத்தரவு

கனடாவில் இந்திய தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக காலிஸ்தான் அமைப்பு அச்சுறுத்தல்!

ஜெய்லர்- 2 படப்பிடிப்பு ஜூலை மாதத்தில் முடியும்: நடிகர் ரஜினி தகவல்

SCROLL FOR NEXT