முகப்பு
உலகம்

வாக்குறுதிகளை நிறைவேற்றாத மேயரை லாரியில் கட்டி இழுத்துச் சென்ற மக்கள்! வைரலாகும் வீடியோ

தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத மேயரை, அலுவலகத்தில் இருந்து இழுத்து வந்த மக்கள் அவரை லாரியில் கட்டி இழுத்துச் சென்றுள்ள சம்பவம் மெக்ஸிகோவில் நடந்துள்ளது.

Updated On : 10 அக்டோபர், 2019 at 6:00 PM
பகிர்:

தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத மேயரை, அலுவலகத்தில் இருந்து இழுத்து வந்த மக்கள் அவரை லாரியில் கட்டி இழுத்துச் சென்றுள்ள சம்பவம் மெக்ஸிகோவில் நடந்துள்ளது.

மத்திய அமெரிக்க நாடான மெக்ஸிகோ போதை மருந்து கடத்தலுக்கு உலகப்புகழ் பெற்றது. இந்த நாட்டில் உள்ள சியாபாஸ் மாகாணத்தில் இருக்கும் லாஸ் மார்கரிட்டாஸ் (Las Margaritas)நகரத்தின் மேயராக இருப்பவர் ஜார்ஜ் லூயிஸ் எஸ்காண்டோன்(Jorge Luis Escandón Hernández).

தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி, அவர் மின்சாரம், குடிநீர், சாலை என்று எந்த வசதியும் செய்ய வில்லை என்று எஸ்காண்டானை பொதுமக்கள் தாக்கி லாரியில் கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.

Advertisement

நேற்று முன் தினம் இரவு மேயரின் அலுவலகத்துக்குள் நுழைந்த 50 peer koNta கும்பல், அவரை வெளியே இழுந்து வந்து தாக்கியுள்ளது. பின்னர், மேயரின் கைகளை ஒரு டிரக்கில் கட்டி அவரை சாலையில் இழுத்துச் சென்றுள்ளனர்.

அதற்குப் பின்னால் கம்பு மற்றும் குச்சிகளுடன் பல கிராம மக்கள் ஓடுகின்றனர். இந்தச் சம்பத்தின் வீடியோ வைரலாக பரவி வருகின்றது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.