செப்டம்பர் 5-ம் தேதி சீனாவின் 4-வது நன்கொடை தினமாகும். புதிய புள்ளிவிவரங்களின்படி, சீனாவில் பதிவு செய்யப்பட்டுள்ள நன்கொடையாளர்களின் எண்ணிக்கை சுமார் 12 கோடியே 60 லட்சமாகும். நன்கொடை அமைப்புகளின் எண்ணிக்கை 5511 ஆகும்.
இந்த ஆண்டின் முற்பாதியில், சீனாவில் இணைய வழியாக மட்டும் 180 கோடி யுவான் (ரூ.1800 கோடி) நன்கொடை பெறப்பட்டது. நன்கொடை வழங்குவதில் 80 மற்றும் 90-களுக்குப் பிறகு பிறந்தவர்கள் முக்கியப் பங்காற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்: சீன வானொலி தமிழ்ப் பிரிவு