உலகம்

நல்லெண்ண நடவடிக்கைகளுடன் பேச்சுவார்த்தைக்கான சாதகமான சூழலை உருவாக்க வேண்டும்: சீனா

இரு தரப்பும் நல்லெண்ண நடவடிக்கைகளை மேற்கொண்டு, பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் அடைவதற்கான சாதகமான சூழலை உருவாக்க பாடுபட்டு வருகின்றன.

DIN

பெய்ஜிங்: அக்டோபர் முதல் தேதியிலிருந்து, 25ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள சீனப் பொருட்களுக்கு கூடுதல் சுங்க வரி விதிக்கும் முடிவை அக்டோபர் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் செப்டம்பர் 11-ம் தேதி அறிவித்தார். முன்னதாக, அமெரிக்கப் பொருட்களுக்கு கூடுதல் சுங்க வரி விதிப்பதில் இருந்து விலக்கு அளிக்கும் முதல் தொகுதிப் பட்டியலை சீனா வெளியிட்டது.

சீன - அமெரிக்க பொருளாதார வர்த்தகக் குழுத் தலைவர்கள் செப்டம்பர் 5-ம் தேதி தொலைபேசியில் தொடர்புகொண்னு பேசினர். அப்போது, அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் அக்டோபர் மாதம் 13-வது சீன-அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், நடப்புப் பேச்சுவார்த்தைக்கு முன்பு, இரு தரப்பும் நல்லெண்ண நடவடிக்கைகளை மேற்கொண்டு, பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் அடைவதற்கான சாதகமான சூழலை உருவாக்க பாடுபட்டு வருகின்றன. பன்னாட்டுச் சமூகத்தின் எதிர்பார்ப்புக்குப் பொருந்திய இத்தகைய முயற்சி,  பாராட்டத்தக்கது.

உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக விளங்கும் சீனா, அமெரிக்கா நாடுகளின் நலன்களும் ஆழமாக ஒன்றிணைந்துள்ளன. இருதரப்பு ஒத்துழைப்பு வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.  இதற்காக, இரு தரப்பும் பேச்சுவார்த்தை மூலம் கருத்துவேற்றுமைகளைக் களைந்து, ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு காண வேண்டும்.

வர்த்தகப் போர் தீவிரமாகி வருவதை சீனா உறுதியுடன் எதிர்க்கிறது. இதைச் சமாளிக்க, இரு தரப்பும் பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்தி, பொதுக் கருத்துகளை அதிகரித்து, கூட்டு வெற்றிபெறும் நிலையில் இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொருளாதார வர்த்தக உடன்படிக்கையை எட்ட சீனா வரும்புகிறது. இத்தகைய விளைவு, சீனா, அமெரிக்கா, மற்றும் உலக நாடுகளுக்கு நன்மை ஏற்படுத்தும் முயற்சியாக இருக்கும்.

தகவல்: சீன வானொலி தமிழ்ப் பிரிவு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

SCROLL FOR NEXT