உலகம்

பிரிட்டன்: பிரெக்ஸிட்டுக்கு எதிரான மனு தள்ளுபடி

பிரெக்ஸிட்டுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை வடக்கு அயர்லாந்து நீதிமன்றம் வியாழக்கிழமை நிராகரித்தது.

DIN


பிரெக்ஸிட்டுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை வடக்கு அயர்லாந்து நீதிமன்றம் வியாழக்கிழமை நிராகரித்தது.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸனின் பிரெக்ஸிட் கொள்கை, அயர்லாந்து அரசுடன் பிரிட்டன் அரசு மேற்கொண்ட ஒப்பந்தங்களுக்கு எதிரானது என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த மனுவை விசாரித்த பெல்ஃபாஸ்ட் நகர உயர்நீதிமன்றம், இந்த விவகாரம் சர்வதேச அரசியல் தொடர்பானது எனவும், அதற்கும் நீதித்துறைக்கும் தொடர்பில்லை எனவும் தெரிவித்தது.
பிரிட்டனின் அங்கமாகத் திகழும் வடக்கு அயர்லாந்து பகுதிக்கும், ஐரோப்பிய யூனியனின் அங்கமாகத் திகழும் அயர்லாந்து நாட்டுக்கும் இடையே, பிரெக்ஸிட்டுக்குப் பிறகும் தொடர வேண்டிய வர்த்தக ஒருங்கிணைப்பு தொடர்பாக, ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறும் (பிரெக்ஸிட்) விவகாரத்தில் இழுபறி நீடித்து வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கௌரவ விரிவுரையாளா்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊதிய உயா்வு: அமைச்சா் கோவி. செழியன் அறிவிப்பு!

பண மோசடி வழக்குகளில் ப.சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அனுமதி

தனியாா் நிறுவனங்களின் பால் விலை லிட்டா் ரூ.6 வரை உயா்ந்தது

தில்லி பல்கலை. கல்லூரியில் புதிய மாணவா் வசதி மையம்: அடிக்கல் நாட்டினாா் அமைச்சா் ஆஷிஷ் சூட்

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.48 கோடி

SCROLL FOR NEXT