உலகம்

பிரிட்டன்: பிரெக்ஸிட்டுக்கு எதிரான மனு தள்ளுபடி

பிரெக்ஸிட்டுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை வடக்கு அயர்லாந்து நீதிமன்றம் வியாழக்கிழமை நிராகரித்தது.

DIN


பிரெக்ஸிட்டுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை வடக்கு அயர்லாந்து நீதிமன்றம் வியாழக்கிழமை நிராகரித்தது.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸனின் பிரெக்ஸிட் கொள்கை, அயர்லாந்து அரசுடன் பிரிட்டன் அரசு மேற்கொண்ட ஒப்பந்தங்களுக்கு எதிரானது என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த மனுவை விசாரித்த பெல்ஃபாஸ்ட் நகர உயர்நீதிமன்றம், இந்த விவகாரம் சர்வதேச அரசியல் தொடர்பானது எனவும், அதற்கும் நீதித்துறைக்கும் தொடர்பில்லை எனவும் தெரிவித்தது.
பிரிட்டனின் அங்கமாகத் திகழும் வடக்கு அயர்லாந்து பகுதிக்கும், ஐரோப்பிய யூனியனின் அங்கமாகத் திகழும் அயர்லாந்து நாட்டுக்கும் இடையே, பிரெக்ஸிட்டுக்குப் பிறகும் தொடர வேண்டிய வர்த்தக ஒருங்கிணைப்பு தொடர்பாக, ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறும் (பிரெக்ஸிட்) விவகாரத்தில் இழுபறி நீடித்து வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுரையிலிருந்து தாம்பரத்துக்கு இன்று மாலை சிறப்பு ரயில்

ஜிஎஸ்டி விகித மாற்றத்தால் பொருளாதாரம் வேகம் எடுக்குமா? என்பது குறித்து...வாசகர்களிடம் இருந்து வந்த கருத்துகளில் சில...

மகாத்மாவின் பிறந்த நாள் நினைவலைகள்!

அகவை நூறில் ஆர்.எஸ்.எஸ்.

குடிமனைப் பட்டா கோரி விவசாயத் தொழிலாளா் சங்கம் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT