முகப்பு
உலகம்

துபை: 3ஆவது மாடியில் இருந்து குதித்து இந்தியர் தற்கொலை

துபையில் கட்டடத்தின் 3ஆவது மாடியிலிருந்து குதித்து இந்தியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:28 PM
கோப்புப் படம்
பகிர்:

துபையில் கட்டடத்தின் 3ஆவது மாடியிலிருந்து குதித்து இந்தியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துவையில் பணிபுரிந்து வருபவர் அசோகன் புருஷோத்தமன்(47). இந்தியரான இவர் ஜெபல் அலி பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றின் 3ஆவது மாடியிலிருந்து குதித்து நேற்று திடீரென தற்கொலை செய்துகொண்டார். 

இதில் படுகாயம் அடைந்த அவர் உடனடியாக மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் சிகிச்சைப் பலனின்றி பலியானார். இச்சம்பவம் குறித்து ஜெபல் அலி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

அசோகன் புருஷோத்தமன் தற்கொலைக்கு முன்பு தனது காலின் நரம்பை வெட்டியதாகவும் கூறப்படுகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →