தென்கொரியாவில் புதிதாக 10 பேருக்கு கரோனா; உயிரிழப்பு இல்லை
தென்கொரியாவில் புதிதாக 10 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கொரியாவில் புதிதாக 10 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா அதிகம் பாதித்த டியாகு பகுதியின் எல்லைப் பகுதிகளை மூடியது உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காணமாக, தென் கொரியாவில் கரோனாவின் தாக்கம் சற்று தணிந்துள்ளது.
தென்கொரியாவில் சனிக்கிழமை காலை நிலவரப்படி 10,718 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 240 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்று அந்த நாட்டின் தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.