பாகிஸ்தானில் மேலும் 415 பேருக்கு கரோனா: பாதிப்பு 2,95,053 ஆக உயர்வு
பாகிஸ்தானில் கரோனா வைரஸ் தொற்று இன்று மேலும் 415 பேருக்குக் கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 2,95,053 ஆக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தானில் கரோனா வைரஸ் தொற்று இன்று மேலும் 415 பேருக்குக் கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 2,95,053 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
தொற்றுக்கு ஒரே நாளில் 9 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து, பலி எண்ணிக்கை 6,283 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கரோனா பாதித்த 2,79,937 பேர் இதுவரை மீண்டு வந்துள்ளனர்.
சிந்து அதிகபட்சமாக 1,29,081 ஆகவும், பஞ்சாப் 96,636 ஆகவும், கைபர்-பக்துன்க்வா 35,923 ஆகவும், இஸ்லாமாபாத் 15,578 ஆகவும், பலூசிஸ்தான் 12,742 ஆகவும், கில்கிட்-பால்டிஸ்தான் 2,816 ஆகவும், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் 2,277 ஆகவும் பதிவாகியுள்ளது.
பாகிஸ்தானில் இதுவரை 2,559,261 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.