ஜெர்மனியில் புதிதாக 17,270 பேருக்கு கரோனா தொற்று
ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 17,270 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 10,84,743 ஆக உயர்ந்துள்ளது
ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 17,270 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 10,84,743 ஆக உயர்ந்துள்ளது என்று ராபர்ட் கோச் நிறுவனம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் கரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. இதனால், பல்வேறு நாடுகளும் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கியுள்ளன. ஜெர்மனியை பொறுத்தவரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
மேலும், ஒரேநாளில் 487 பேர் பலியாகியுள்ள நிலையில் இதுவரை மொத்தம் 17,123 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொற்று பாதித்து 7,58,800 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 3,09,502 பேர் மருத்தவமனை சிகிச்சையில் உள்ளனர்.