மெக்சிகோவில் அதிகரிக்கும் கரோனா: புதிய பாதிப்பு 11,251, பலி 800
மெக்சிகோவில் இன்றைய நிலவரப்படி கரோனா தொற்றுக்கு மேலும் 11,251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மெக்சிகோவில் இன்றைய நிலவரப்படி கரோனா தொற்றுக்கு மேலும் 11,251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கரோனா தொற்று பரவியுள்ள நிலையில், மெக்சிகோவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகின்றது.
அதன்படி, டிச.3-ஆம் தேதி நிலவரப்படி பாதிப்பு நிலவரத்தை அந்த நாட்டுச் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, மெக்சிகோவில் புதிதாக 11,251 பேர் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அந்நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,13,3,613 ஆக உள்ளது.
தொற்று பரவத் தொடங்கியதிலிருந்து, கடந்த 24 மணி நேரத்தில் ஒருநாள் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், ஒரேநாளில் 800 பேர் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1,07,565 ஆக உயர்ந்துள்ளது.