முகப்பு
உலகம்

பிரேசிலில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்தது: 17 பேர் பலி

பிரேசிலில் 115 அடி உயர பாலத்திலிருந்து சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் பலியானார்கள். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:02 PM
பகிர்:

பிரேசிலில் 115 அடி உயர பாலத்திலிருந்து சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் பலியானார்கள். 
பிரேசிலின் தென்கிழக்கு மாகாணமான மினாஸ் ஜெராய்ஸில் 40 பேருடன் சுற்றுலாப் பேருந்து நேற்று சென்று கொண்டிருந்தது. ஜோவா மோன்லேவாட் எனுமிடத்தில் 115 அடி உயரப் பாலத்தில் வந்துகொண்டிருந்தபோது பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் கீழே விழுந்தது. 
இந்த விபத்தில் 17 பேர் பலியானார்கள். 23 பேர் படுகாயமடைந்தனர். 
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.