ஆப்கனில் வெடிகுண்டு தாக்குதல்: 2 பேர் பலி
ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தில் சனிக்கிழமை நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர். 4 பேர் காயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தில் சனிக்கிழமை நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர். 4 பேர் காயமடைந்தனர்.
சனிக்கிழமை லோய் மந்தா பகுதியில் இந்த குண்டுவெடிப்பு நடந்தது. இந்த வெடிகுண்டு தாக்குதலை தலிபான்கள் நடத்தியதாக ஆப்கன் உள்துறை சந்தேகம் தெரிவித்துள்ளது.
எனினும் வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்திற்கு தலிபான் அமைப்பினர் இதுவரை பொறுப்பேற்கவில்லை. தாக்குதல் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.