காபூலில் குண்டு வெடிப்பு: காவலர் பலி, 2 பேர் காயம்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் புதன்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடித்தது. இதில் காவலர் ஒருவர் பலியானர், இருவர் காயமடைந்தனர்.
உலகம்காபூலில் குண்டு வெடிப்பு: காவலர் பலி, 2 பேர் காயம்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் புதன்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடித்தது. இதில் காவலர் ஒருவர் பலியானர், இருவர் காயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் புதன்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடித்தது. இதில் காவலர் ஒருவர் பலியாகினர், இருவர் காயமடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவம் காபூலின் பி.டி 12 பகுதியில் உள்ள ஒரு காவலர் வாகனத்தைக் குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியுள்ளதாக அறிக்கையில் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.
முன்னதாக, செவ்வாயன்று வடக்கு மாகாணமான ஃபரியாப் மற்றும் கிழக்கு மாகாணமான கோஸ்டில் இரண்டு தனித்தனியான வெடிகுண்டு சம்பவங்களில் இரண்டு வீரர்கள் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர், 16 பேர் காயமடைந்தனர்.
மேலும், கடந்த 64 நாள்களில் 29 ஐ.இ.டி குண்டுவெடிப்பு சம்பவங்கள் காபூலில் நிகழ்ந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.