முகப்பு
உலகம்

பாகிஸ்தானில் 10 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பலி

பாகிஸ்தானில் கரோனா நோய்த் தொற்றுக்குப் பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

Updated On : 30 டிசம்பர், 2020 at 3:33 PM
Pakistan's Covid-19 fatalities cross 10,000 mark
பகிர்:

பாகிஸ்தானில் கரோனா நோய்த் தொற்றுக்குப் பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 55 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளதை அடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 10,047 ஆக உயர்ந்துள்ளது. 

பெரும்பாலான இறப்புகள் பஞ்சாப் மாகாணத்திலும், அதற்கு அடுத்ததாக சிந்து மாகாணத்திலும் அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. நிகழ்ந்துள்ளன. நாட்டில் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. 

Advertisement

மேலும், ஒரேநாளில் 2,155 பேருக்குத் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 4,77,240 ஆக உள்ளது. தொற்று விகிதம் 5.82 சதவீதமாக உள்ளது. இதில், 4,30,113 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். 

நோய்த் தொற்று பாதித்த 2,219 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், கரோனா எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாகவும் என்.சி.ஓ.சி தெரிவித்துள்ளது.

இங்கிலாந்திலிருந்து திரும்பிய இரண்டு பேர் உருமாறிய கரோனா கண்டறியப்பட்டுள்ளதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சிந்து மாகாணம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

மேலும், புதியவகை கரோனா வைரஸ் பாகிஸ்தானுக்குள் நுழைவதைத் தடுக்கும் பொருட்டு, பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளதாக என்.சி.ஓ.சி தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.