உலகம்

ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு அனுமதி

DIN


ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனமும் இணைந்து உருவாக்கிய கரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

பிரிட்டனில் புதியவகை கரோனா அதிக அளவில் பரவி வரும் நிலையில், ஃபைசர் தடுப்பூசியை தொடர்ந்து ஆக்ஸ்போர்ட்டின் தடுப்பூசிக்கும் பிரிட்டன் அரசு இந்த ஒப்புதல் அளித்துள்ளது. 

பிரிட்டனில் கடந்த சில நாள்களாக புதிய வகை கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. நாள்தோறும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பிரிட்டனிலிருந்து சென்ற மற்ற நாட்டு பயணிகளுக்கும் புதியவகை கரோனா கண்டறியப்பட்டுள்ளது.

கரோனாவுக்கு ஃபைசர் தடுப்பு மருந்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், புதிய வகை கரோனா அதிகரிப்பதால் தற்போது ஆக்ஸ்போர்டு, அஸ்ட்ரா ஜெனகா என்ற இரு அமைப்புகள் சேர்ந்து உருவாக்கிய தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

2 டிகிரி செல்சியஸ் முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை சேமித்து வைக்க முடியும். ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதால், குறைந்த விலையில் தடுப்பூசிகள் கிடைக்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT