ஆப்கனில் 26 தலிபான்கள் சுட்டுக்கொலை
ஆப்கனில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் 26 தலிபான்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஆப்கனில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் 26 தலிபான்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஆப்கனில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக கத்தார் தலைநகர் தோஹாவில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் அமைதி ஒப்பந்தங்களை மீறியும் அங்கு பயங்கரவாத சம்பவங்கள் அறங்கேறி வருகின்றன.
இந்த நிலையில் ஆப்கனில் தலிபான்களுக்கு எதிரான நடவடிக்கையில் நேற்று 26 தலிபான்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதுகுறித்து அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவிக்கையில், மத்திய ஃபராக் மாகாண புறநகரிலும், பாலா-போலோக் மாவட்டத்திலும், நேற்று 26 தலிபான்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் 14 பேர் காயமடைந்தனர். ஏ.என்.ஏ நிலைகளைத் தாக்க திட்டமிட்டிருந்தபோது அவர்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
பெரிய அளவில் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, 3 சுரங்கங்கள் மற்றும் 8 கோட்டைகளும் அழிக்கப்பட்டன என்றார்.