ரஷியாவில் 57 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பலி
ரஷியாவில் கரோனா பலி எண்ணிக்கை 57 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
ரஷியாவில் கரோனா பலி எண்ணிக்கை 57 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 27 மணிநேரத்தில் புதிதாக 27,747 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக தலைநகர் மாஸ்கோவில் 6,566 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,159,297 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவுக்கு இன்று மேலும் 593 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 57,019ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவிலிருந்து இன்று 28,922 பேர் குணமடைந்தனர். இதுவரை 2,554,340 பேர் குணமடைந்துள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் கரோனா பலி எண்ணிக்கையில் ரஷியா 4ஆவது இடத்தில் உள்ளது.