ஈரானில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவு
ஈரானில் கோரசன் ராசாவி மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஈரானிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது.
ஈரானில் கோரசன் ராசாவி மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஈரானிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது.
ஈரானின் புனித நகரமான மஷ்ஹாத் நகரின் தெற்கே 300 கிமீ தூரத்தில் 8 கிமீ ஆழத்தில், 34.030 வடக்கு அட்சரேகை மற்றும் 60.325 கிழக்கு தீர்க்கரேகையில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.