உயிரிழந்த தான்சானியா முன்னாள் ஜனாதிபதி பெஞ்சமின் எம்.காபா 
உலகம்

தான்சானியா நாட்டின் முன்னாள் அதிபர் மறைவு

தான்சானியா நாட்டின் முன்னாள் அதிபர் பெஞ்சமின் எம். காபா (81) உடல்நலக்குறைவால் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

DIN

தான்சானியா நாட்டின் முன்னாள் அதிபர் பெஞ்சமின் எம்.காபா (81) உடல்நலக்குறைவால் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

1995 முதல் 2005 வரை தான்சானியா நாட்டின் அதிபராக பதவி வகித்தவர் பெஞ்சமின் எம்.காபா.

கிழக்கு ஆப்பிரிக்காவில் பல பிராந்திய சமாதான முயற்சிகளுக்கு தலைமை தாங்கிய எம்.காபா, உடல்நலக்குறைவால் டார் எஸ் சலாமில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். 

"தேசத்தின் மீதான அவரது மிகுந்த அன்பு, அவரது பக்தி, கடின உழைப்பு மற்றும் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் நான் அவரை நினைவில் கொள்வேன்" என்று தான்சானியா அதிபர் மாக்ஃபுலி கூறினார்.

எம்.காபாவின் மறைவிற்கு நாட்டில் ஏழு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், அனைத்து கொடிகளும் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் அரசு தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓமன் நாட்டில் உறவினா் கடையில் ரூ.1.50 கோடி மோசடி: கோவை இளைஞா் கைது

சென்னிமலையில் குரங்குகளுக்கு உணவு அளித்தவருக்கு அபராதம்

குழந்தைகளை கோயில்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்: ஜெயேந்திரபுரி மகா சுவாமிஜி

அவிநாசி அரசு மருத்துவமனையில் பேரிடா் மேலாண்மை ஒத்திகை

பிஎஸ்என்எல் 4 ஜி சேவையை இலவசமாக சோதிக்க சிம்காா்டு

SCROLL FOR NEXT