முகப்பு
உயிரிழந்த தான்சானியா முன்னாள் ஜனாதிபதி பெஞ்சமின் எம்.காபா
உலகம்

தான்சானியா நாட்டின் முன்னாள் அதிபர் மறைவு

தான்சானியா நாட்டின் முன்னாள் அதிபர் பெஞ்சமின் எம். காபா (81) உடல்நலக்குறைவால் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

உலகம்

தான்சானியா நாட்டின் முன்னாள் அதிபர் மறைவு

தான்சானியா நாட்டின் முன்னாள் அதிபர் பெஞ்சமின் எம். காபா (81) உடல்நலக்குறைவால் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:59 PM
உயிரிழந்த தான்சானியா முன்னாள் ஜனாதிபதி பெஞ்சமின் எம்.காபா
பகிர்:

தான்சானியா நாட்டின் முன்னாள் அதிபர் பெஞ்சமின் எம்.காபா (81) உடல்நலக்குறைவால் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

1995 முதல் 2005 வரை தான்சானியா நாட்டின் அதிபராக பதவி வகித்தவர் பெஞ்சமின் எம்.காபா.

கிழக்கு ஆப்பிரிக்காவில் பல பிராந்திய சமாதான முயற்சிகளுக்கு தலைமை தாங்கிய எம்.காபா, உடல்நலக்குறைவால் டார் எஸ் சலாமில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். 

"தேசத்தின் மீதான அவரது மிகுந்த அன்பு, அவரது பக்தி, கடின உழைப்பு மற்றும் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் நான் அவரை நினைவில் கொள்வேன்" என்று தான்சானியா அதிபர் மாக்ஃபுலி கூறினார்.

எம்.காபாவின் மறைவிற்கு நாட்டில் ஏழு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், அனைத்து கொடிகளும் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் அரசு தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →