முகப்பு
உலகம்

பாகிஸ்தானில் ஒரே நாளில் 1114 பேர் கரோனாவால் பாதிப்பு

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில்  1114 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:02 PM
பாகிஸ்தானில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு
பகிர்:

உலகம் முழுவதும் கரோனா வைரஸின் பரவல் தீவிரமாகி வருகிறது.பல்வேறு நாடுகள் கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தவித்து வருகின்றன.

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில்  1114 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்  கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 77 ஆயிரத்து 402 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்ட 2 லட்சத்து 46 ஆயிரத்து 131 பேர் நோய் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

பாகிஸ்தான் முழுவதும் இதுவரை 19 லட்சத்து 52 ஆயிரத்து 730 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 21 ஆயிரத்து 628 பேர் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5924 ஆக அதிகரித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →