பெய்ஜிங்கில் புதிதாகக் கண்டறியப்பட்ட கொவைட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இது தொடர்பான நிபுணர்களின் கருத்துகள் பற்றி சிங்கப்பூரின் ‘லியன்ஹேசாவ்பாவ்’ எனும் செய்தியேட்டில் 23ஆம் நாள் கட்டுரை ஒன்றை வெளியிடப்பட்டது.
பெய்ஜிங்கில் புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. வைரஸ் பரவும் அளவு மற்றும் முக்கிய இடர்பாடுகள் நிறைந்த இடங்கள் ஆகியவை பற்றி பெய்ஜிங் மிகக் குறுகிய காலத்தில் அறிந்து கொண்டு நோய்த் தொற்று அதிகரிக்கும் போக்கை தடுத்துள்ளதை இது காட்டுக்கிறது. பெய்ஜிங்கின் நிலைமை தெளிவாக சீராகி வருகிறது என்று இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் கொவைட்-19 நோய் பரவல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. கிழக்காசியா மற்றும் ஐரோப்பாவில் இந்நோய் பரவல் கட்டுக்குள் உள்ளது. அமெரிக்க கண்டத்தில் இந்நோய் பரவல் பாதிப்பு உச்சநிலையை எட்டவில்லை. இந்நிலையில் சீனாவின் குறிப்பிட்ட ஒரு பகுதியில் மீண்டும் ஏற்பட்ட வைரஸ் பாதிப்பு வரம்புக்குள் உள்ளது.
தகவல்:சீன ஊடகக் குழுமம்