முகப்பு
உலகம்

அனைத்து ஊழியர்களுக்கும் மே 22 'கரோனா விடுமுறை': கூகுள் அறிவிப்பு

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் உலகம் முழுவதும் ஊரடங்கு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மே 22 -ம் தேதி அனைத்து ஊழியர்களுக்கும் விடுமுறை அறிவித்துள்ளது கூகுள்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:37 PM
google071343
பகிர்:

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் உலகம் முழுவதும் ஊரடங்கு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மே 22-ம் தேதி அனைத்து ஊழியர்களுக்கும் விடுமுறை அறிவித்துள்ளது கூகுள்.

கரோனா தொற்று காரணமாக ஒட்டுமொத்த உலகமும் கடும் சிரமங்களை சந்தித்து வருகிறது. பல தொழில்கள் முடங்கியுள்ளன. ஏராளமான ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றி வருகிறார்கள், பலரும் வீட்டில் இருந்து பணியாற்ற முடியாத நிலையில் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

கரோனா தொற்றில் இருந்து காத்துக் கொள்ளும் வகையில், பெரும்பாலான ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற ஒப்புக் கொண்ட மிகப்பெரும் நிறுவனங்களில் ஒன்றாக கூகுள் விளங்குகிறது. 

தற்போது, கூகுள் தனது கொள்கையில் சில மாற்றங்களை செய்துள்ளது. அதாவது, தனது ஊழியர்கள் டிசம்பர் 2020 வரை வீட்டில் இருந்தே பணியாற்றலாம் என்று அறிவித்துள்ளது.

மேலும், எந்த ஊழியரும் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்படாது, அதிக அவசியம் இருப்பவர்கள் மட்டும் ஜூன் அல்லது ஜூலையில் அலுவலகம் வந்து பணியாற்றலாம், அதில்லாமல், புதிய கொள்கையின்படி, 2020 மே 22-ம் தேதி அனைத்து ஊழியர்களுக்கும் கரோனா விடுமுறை அறிவிக்கப்படுவதாகவும், கூகுள் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான அல்ஃபாபெட்-டின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் கூகுள் இந்த விடுமுறையை அறிவித்துள்ளது. இதனை கரோனா விடுமுறை என்றும் அறிவித்துள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →