சீனாவுக்கும் இந்தியாவுக்குமிடையிலான எல்லை பகுதியின் நிலைமை நிதானமாகவுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சின் செய்திதொடர்பாளர் சாவ் லி ச்சியன் 27ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
எல்லை பிரச்சினை குறித்த சீனாவின் கருத்துகள் தெளிவானவை. இப்பிரச்சினை குறித்து இரு நாட்டுத் தலைவர்கள் எட்டியுள்ள பொதுக் கருத்துகளை சீன அரசு நடைமுறைப்படுத்தி, இரு நாடுகள் எட்டியுள்ள உடன்படிக்கையைப் பின்பற்றி, இரு நாட்டு எல்லை பகுதியின் பாதுகாப்பைப் பேணிக்காத்து வருவதாகவும் சாவ் லி ச்சியன் தெரிவித்தார்.
தகவல்:சீன ஊடகக் குழுமம்