ஜார்ஜிய பிரதமர் ஜியோர்கி ககாரியா கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
கரோனா தொற்று பாதிப்பால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஜார்ஜியா நாட்டின் பிரதமர் ககாரியாவிற்கு கரோனா தொற்று பாதிப்பு திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
அவருடைய மெய்க்காப்பாளர் ஒருவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து ககாரியாவிற்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
பிரதமர் ககாரியாவிற்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகக் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜார்ஜியாவில் திங்கள்கிழமை நிலவரப்படி 42 ஆயிரத்து 579 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.