சீனாவில் நிலக்கரி சுரங்க விபத்து: 4 பேர் பலி, 4 பேர் மாயம்
சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் பலியானார்கள்.
சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் பலியானார்கள்.
சீனாவின் டோங்சுவான் நகரில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் நேற்று 42 பேர் பணி மேற்கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்குரிய வாயு திடீரென வெடித்தது. இந்த சம்பவத்தில் 4 பேர் பலியானார்கள், 4 பேர் மாயமானார்கள்.
நிகழ்விடத்துக்கு வந்த மீட்புக்குழுவினர் 34 பணியாளர்களை பத்திரமாக மீட்டனர். எனினும், மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.