உலகம்

காங்கோவில் கட்டுக்குள் வந்தது எபோலா நோய்த்தொற்று

DIN

கடந்த 5 மாதங்களாக காங்கோவில் பரவி வந்த எபோலா நோய்த்தொற்று கட்டுக்குள் வந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

2020ஆம் ஆண்டின் ஜூன் மாதம் முதல் ஆப்பிரிக்க நாடானா காங்கோவில் எபோலா நோய்த்தொற்று பரவ ஆரம்பித்தது. இந்த நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட 119 பேர் 55 பேர் பலியாகினர்.

இதனைத் தொடர்ந்து நோய்க்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் அந்நாட்டு அரசு ஈடுபட்டது. போதிய மருத்துவ வசதிகள், தடுப்பூசிகள் பயன்பாடு என நோய்த் தடுப்பு நடவடிக்கை மூலம் எபோலா நோயை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 

முந்தைய தொற்றுநோய்களைப் போலவே, தடுப்பூசிகளின் பரவலான பயன்பாடு நோயைக் கட்டுப்படுத்த உதவியதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் காங்கோவில் எபோலா நோய்த்தொற்று பரவத் தொடங்கியது. இதுவரை காங்கோவில் எபோலா பாதிப்பால் 2,277 பேர் பலியாகியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்க்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT