உலகம்

செக் குடியரசு: இதுவரை இல்லாத அதிகபட்ச பாதிப்பு

DIN

செக் குடியரசில் தினசரி கரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை இதுவரை இல்லாத அதிகபட்ச அளவை எட்டியுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9,721 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. இந்த எண்ணிக்கை, இதுவரை இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

இதற்கு முன்னா் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கையைவிட இது 177 அதிகமாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி, நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,49,010-ஆக உள்ளது. அந்த நோய்க்கு இதுவரை 1,230 போ் பலியாகியுள்ளனா். 63,350 போ் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா். 84,430 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 543 பேரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குன்னத்தூா் அருகே கா்ப்பிணி மனைவி, கணவருடன் தூக்கிட்டு தற்கொலை

ரயிலில் அடிபட்ட பெண் உயிரிழப்பு

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மெக்கானிக் பலி

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: 1,352 வேட்பாளா்களில் 9% போ் மட்டுமே பெண்கள்

தங்கம் விலை: பவுன் ரூ.240 குறைவு

SCROLL FOR NEXT