உலகம்

பிரான்ஸில் 2-வது பொதுமுடக்கம்: பாரிஸில் 700 கி.மீ. நீளத்துக்கு போக்குவரத்து நெரிசல்

DIN

பிரான்ஸில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதால், அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் இரண்டாவது முறையாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.  இதனால், பாரிஸில் 700 கி.மீ. நீளத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பிரான்ஸில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் பொதுமுடக்கம் காரணமாக, பாரிஸில் தங்கியிருந்த மக்கள் ஒரே நேரத்தில் தங்களது சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றதால், சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

பாரிஸ் நகர மக்களும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணி நிமித்தமாக வசித்து வந்த மக்களும் வெள்ளிக்கிழமை மாலை தங்களது சொந்த ஊர்களை நோக்கிப் படையெடுத்ததன் விளைவாக, நகரின் முக்கிய வீதிகளில் 700 கிலோ மீட்டர் நீளத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கடந்த ஏழு மாதங்களில் பிரான்ஸில் நடைமுறைப்படுத்தப்படும் இரண்டாவது பொதுமுடக்கம் இதுவாகும்.

அடுத்த ஒரு மாத காலத்துக்கு பாரிஸில் உள்ள தங்களது குடியிருப்புகளுக்குள் அடைந்து கிடக்க விரும்பாத மக்கள், ஒரே நேரத்தில் பாரிஸில் இருந்து புறப்பட்டதால், இதுவரை நாடு காணாத ஒரு போக்குவரத்து நெரிசலைக் காண முடிந்தது.  பொதுமுடக்கம் காரணமாக, போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!

யெச்சூரி உரையில் ’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன வானொலி, தொலைக்காட்சி!

இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

SCROLL FOR NEXT