ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.2 ஆகப் பதிவு
ஜப்பானின் இபராகி மாகாணத்தில் திங்கள்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.2 ஆகப் பதிவாகியுள்ளது.
ஜப்பானின் இபராகி மாகாணத்தில் திங்கள்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.2 ஆகப் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து ஜப்பான் வானியல் ஆய்வு மையம் கூறுகையில்,
ஜப்பானின் இபராகி மாகாணத்தில் இன்று காலை 6.34 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் மையப்பகுதி 36.7 டிகிரி வடக்கிலும், 141.6 டிகிரி தீர்க்கரேகையின் கிழக்கிலும், 20 கி.மீ ஆழத்திலும் இருந்தது.
மேலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் இதுவரை வெளியாகவில்லை. நிலநடுக்கம் குறித்த பாதிப்பு மற்றும் சேதங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.