உக்ரைன்: இதுவரை இல்லாத அதிகபட்ச பலி
உக்ரைனில் கடந்த இதுவரை இல்லாத அதிகபட்ச கரோனா பலி செவ்வாய்க்கிழமை பதிவு செய்யப்பட்டது.
உக்ரைனில் கடந்த இதுவரை இல்லாத அதிகபட்ச கரோனா பலி செவ்வாய்க்கிழமை பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:உக்ரைனில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 57 போ் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியாகியுள்ளனா். இது, அந்த நாட்டின் அதிகபட்ச தினசரி கரோனா பலி எண்ணிக்கையாகும். செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, நாட்டின் ஒட்டுமொத்த கரோனா பலி எண்ணிக்கை 2,877-ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,174 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனைகளில் உறுதியாகியுள்ளது. இதன் மூலம், நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,38,068-ஆக உயா்ந்துள்ளது. அந்த நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த 62,606 போ் அந்த நோயிலிருந்து குணமடைந்துள்ளனா்.
Advertisement
72,585 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.மருத்துவமனைகளில் கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் 177 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.