பிரேசிலில் ஒரேநாளில் கரோனாவுக்கு 3,869 பேர் பலி
பிரேசிலில் ஒரேநாளில் கரோனாவுக்கு 3,869 பேர் பலியாகியுள்ளனர்.
பிரேசிலில் ஒரேநாளில் கரோனாவுக்கு 3,869 பேர் பலியாகியுள்ளனர்.
உலக அளவில் கரோனா பாதிப்புகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் பிரேசில் உள்ளது. இங்கு கடந்த சில நாள்களாக கரோனா பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
இதன்படி பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கரோனாவுக்கு 3,869 பேர் பலியாகியுள்ளர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 3,21,515ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 90,638 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,27,48,747ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 11.16 மில்லியன் பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.