முகப்பு
தமிழ்நாடு

விஜய்யை பார்க்கச் சென்று இளைஞர்கள் விபத்தில் சிக்குவது வருத்தமளிக்கிறது: காளியம்மாள்

விஜய்யை பார்க்கச் சென்று இளைஞர்கள் விபத்தில் சிக்குவது வருத்தமளிப்பதாக அதிமுக கொள்கைப் பரப்பு துணைச்செயலர் காளியம்மாள் தெரிவித்துள்ளார்.

Updated On : 5 ஏப்ரல் 2026, 12:57 pm IST
காளியம்மாள்
பகிர்:

விஜய்யை பார்க்கச் சென்று இளைஞர்கள் விபத்தில் சிக்குவது வருத்தமளிப்பதாக அதிமுக கொள்கைப் பரப்பு துணைச்செயலர் காளியம்மாள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் அளித்த பேட்டியில், தவெக கட்சியில் இருக்கும் பிள்ளைகள் அரசியல் படுத்தப்பட வேண்டும். விஜய் ஒரு நடிகர், அவரை பார்க்க ஆர்வம் இருக்கும் என்பது உண்மைதான். என்றாலும் அவர் பொதுத் தளத்திற்கு வந்து விட்டதால் இனிமேல் அடிக்கடி பார்க்கும் சூழல் இருக்கும் என்பதை உணர வேண்டும்.

விஜய் மக்களைச் சந்திக்கத்தான் போகிறார். அவரைப் பார்க்கின்ற ஆசையில் இளைஞர்கள் விபத்தில் சிக்குவது வருத்தம் அளிக்கிறது. இளைஞர்கள் இதைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களின் பெற்றோர்கள் தவிப்பதை பார்க்க வேண்டும். தஞ்சாவூர் விபத்தில் பலியான இளைஞரின் தந்தை அளித்த பேட்டி மனதிற்கு மிகவும் வலியாக இருந்தது.

Advertisement

Advertisement

அதுபோலத்தான் கரூர் சம்பவம். இளைஞர்கள் அரசியலை உற்றுநோக்க வேண்டும். இளைஞர்களுக்கு ஒருவர் மீது பற்றும், பாசமும் இருக்க வேண்டியதுதான். ஆனால் அது உயிரைப் போக்கின்ற அளவில் இருப்பது வருத்தத்திற்குரிய ஒன்றுதான். எம்ஜிஆரை பார்க்க மக்கள் 3 நாட்கள் காத்திருந்தனர். இவ்வாறு கூறினார்.

summary

Kaliyammal expressed grief over the accidents involving youngsters who were traveling to catch a glimpse of Vijay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.