முகப்பு
தமிழ்நாடு

பிரேமலதாவுக்கு 10, திருமாவளவனுக்கு 8 சீட்தான் திமுகவின் சமூகநீதி: அன்புமணி கடும் தாக்கு

அடித்தட்டு மக்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே திமுக பயன்படுத்துவதாக பாமக தலைவர் அன்புமணி குற்றச்சாட்டு

Updated On : 5 ஏப்ரல், 2026 at 7:17 AM
அன்புமணி - கோப்புப் படம்
பகிர்:

அடித்தட்டு மக்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே திமுக பயன்படுத்துவதாக பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அன்புமணி பேசுகையில், நீங்களெல்லாம் (திமுக கூட்டணி) சமூக நீதி குறித்து பேசுகிறீர்கள். கூட்டணியில் 5 வருடங்களாக திருமாவளவன் அவதியுற்று வருகிறார். அவரால் வாய்கூட பேசமுடியவில்லை. அவரை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

விஜயகாந்த் எதற்காக கட்சி தொடங்கினார்? இந்த ஊழல் திமுகவை ஒழிக்க வேண்டும், அப்புறப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காகவே கட்சி தொடங்கினார். ஆனால், இன்று அங்கேயே பிரேமலதா சேர்ந்து விட்டார்.

Advertisement

இதனை விஜயகாந்த் ஆன்மா மன்னிக்கவும் செய்யாது; சும்மாவும் இருக்காது. இது எவ்வளவு பெரிய துரோகம்.

அவர்கள் அங்கு போனவுடன் 10 சீட் கொடுத்து விட்டனர். ஆனால், அவ்வளவு உழைத்து, 10 வருடங்கள் உடனிருந்த திருமாவளவனுக்க்கு 8 சீட் மட்டும்தான். இதுதான் திமுக.

உழைக்கின்ற வர்க்கம், ஒடுக்கப்பட்ட மக்கள், அடித்தட்டு மக்களுக்கு திமுக எதுவும் கொடுக்க மாட்டார்கள். அவர்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே திமுக பார்க்கிறது.

அவர்களின் வாக்கு மட்டும் வேண்டும். ஆனால், அவர்கள் முன்னேறக் கூடாது, படிக்கக் கூடாது, அப்படியே அடிமையாகவே இருக்க வேண்டும், போதைக்கு அடிமையாக இருக்க வேண்டும், படிப்பறிவு இருக்கக் கூடாது, கூலியாக இருக்க வேண்டும் என்பதுதான் திமுகவின் நோக்கமே என்று தெரிவித்தார்.

summary

PMK leader Anbumani alleges that the DMK uses the marginalized sections of society merely as a vote bank.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments