முகப்பு
உலகம்

நேபாளத்திற்கு 39 ஆம்புலன்ஸ் வாகனங்களை வழங்கிய இந்தியா

இருநாட்டு உறவை வலுப்படுத்தும் விதமாக நேபாளம் நாட்டிற்கு 39 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இந்திய அரசின் சார்பில் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:04 PM
நேபாளத்திற்கு 39 ஆம்புலன்ஸ் வாகனங்களை வழங்கிய இந்தியா
பகிர்:

இருநாட்டு உறவை வலுப்படுத்தும் விதமாக நேபாளம் நாட்டிற்கு 39 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இந்திய அரசின் சார்பில் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

இதுதொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கரோனா தொற்று நோய்க்கு எதிரான நேபாளத்தின் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் விதமாக இந்திய அரசின் சார்பில்  வெண்டிலேட்டர்கள், அவசர மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்ட 39 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காத்மாண்டுவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியத் தூதரக அதிகாரிகள் 39 ஆம்புலன்ஸ் வாகனங்களையும், 6 பள்ளி வாகனங்களையும் நேபாள அதிகாரிகளிடம் வழங்கினர்.

முன்னதாக கடந்த ஆண்டு மகாத்மா காந்தியின் 151ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 41 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் ஆறு பள்ளி பேருந்துகளை நேபாளத்திற்கு இந்தியா வழங்கியது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →