கலிபோர்னியா : காட்டுத் தீயினால் 2.44 லட்சம் ஏக்கர் நிலம் எரிந்து நாசம்  
உலகம்

கலிபோர்னியா : காட்டுத் தீயினால் 2.44 லட்சம் ஏக்கர் நிலம் எரிந்து நாசம் 

வடக்கு கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் இதுவரை 2.44 லட்சம் ஏக்கர் நிலம் எரிந்து நாசமாகியிருக்கிறது.

DIN

வடக்கு கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் இதுவரை 2.44 லட்சம் ஏக்கர் நிலம் எரிந்து நாசமாகியிருக்கிறது.

அம்மாகாண வனத்துறை சார்பில் அளிக்கப்பட்ட தகவலில் ," 2.44 லட்சம் ஏக்கர் வனப்பகுதி காட்டுத் தீயால் எரிந்தது. இது மொத்த வனப்பகுதியில் 32 சதவீதம் . வனத்தில் ஏற்பட்ட தீக்கு காரணமானவர்களைத் தேடி வருகிறோம் ' எனத் தெரிவித்தனர்.

பாதிப்புகள் மற்றும் சேதாரங்கள் குறித்த தகவலும் வெளியாகியிருக்கிறது. அதில் மொத்தம் 69 கட்டடங்கள் இடிந்து விழுந்ததாகவும் 9 கட்டடங்கள் சேதாரமானதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது .

தற்போது அமெரிக்கா முழுவதும் 83 க்கும் மேற்பட்ட வனப்பகுதியில்  காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. இதனால் 10,435 கட்டடங்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாக வனத்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

மேலும் இதுவரை ஒட்டுமொத்தமாக 400 கட்டடங்களும்  342 வாகனங்களும் தீக்கிரையானதாக கூறப்பட்டிருக்கிறது .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT