கரோனா தடுப்பூசி விநியோகத்தில் சாதனை படைத்த அமெரிக்கா
50 சதவிகித அமெரிக்கர்கள் இரண்டு தவணை தடுப்பூசிகளை செலுத்தி கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
50 சதவிகித அமெரிக்கர்கள் இரண்டு தவணை தடுப்பூசிகளை செலுத்தி கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்க மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் இரண்டு தவணை கரோனா தடுப்பூசிகளை செலுத்தி கொண்டுள்ளதாக என அமெரிக்க தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகையின் கரோனா தரவுகள் இயக்குநர் சைரஸ் ஷாபார், "50 சதவிகித அமெரிக்கர்கள் முழுவதுமாக தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இதை நாம் தொடர வேண்டும்" என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இரண்டு தவணை மாடர்னா அல்லது ஃபைசர் தடுப்பூசிகள் அல்லது ஒரு தவணை ஜான்சன் அன்ட் ஜான்சன் தடுப்பூசிகளை 16 கோடியே 50 லட்சம் அமெரிக்கர்கள் செலுத்தியிருக்க வேண்டும் என்பது தெரியவருகிறது.
வயது வந்தோரில் 50 சதவிகித அமெரிக்கர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற இலக்கு கடந்த மே மாதம் எட்டப்பட்டது. அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்றதிலிருந்து கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரமாக மேற்கொண்டுவருகிறார்.
இதையும் படிக்க | நாட்டில் புதிதாக 38,628 பேருக்கு தொற்று: 617 பேர் பலி
இருப்பினும், பழமைவாதிகள் அதிகம் வாழும் பகுதிகளில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், தடுப்பூசி விநியோகம் ஏப்ரல் மாதம் சுணக்கம் கண்டது. தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதால் இயல்பு வாழ்க்கை திரும்பும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டெல்டா வகை கரோனா தீவிரமாக பரவி அரசின் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டது.
இதனிடையே, அரசு அலுவலர்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் அல்லது வாரம் இருமுறை கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க அரசு வலியுறுத்தியுள்ளது. கரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்களை தொடரும் என்றும் பைடன் தெரிவித்திருந்தார்.