உலகம்

தீவிரமாகும் டெல்டா கரோனா: திணறும் ஆஸ்திரேலியா

DIN

ஆஸ்திரேலியாவில் மக்கள் தொகை அதிகமுள்ள மூன்று மாநிலங்களில் மொத்தமாக 282 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

டெல்டா வகை கரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் ஆஸ்திரேலியா திணறி வருகிறது. இந்நிலையில், மக்கள் தொகை அதிகமுள்ள நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, குவின்ஸ்லாந்து ஆகிய மாநிலங்களில் மொத்தமாக 282 பேருக்கு கரோனா இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டது.

நியூ சவுத் வேல்ஸ் தலைநகரான சிட்னியில் கடந்த ஆறு வார காலமாக ஊரடங்கு அமலில் இருந்தபோதிலும், இன்று மட்டும் 262 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் கூறுகையில், "சுகாதார விதிகளை பின்பற்றுமாறு அனைவரையும் கேட்டு கொள்கிறேன். அவசிய காரணங்களுக்காக மட்டும் வீட்டை விட்டு வெளியே வாருங்கள்" என்றார்.

நியூ சவுத் வேல்ஸ் மருத்துவமனையில் 362 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அதில், 58 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கின்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள 54 பேர் தடுப்பூசி செலுத்து கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT