மேகாலயத்தில் லேசான நிலநடுக்கம்
மேகாலயத்தில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.2 எனப் பதிவாகியுள்ளது.
மேகாலயத்தில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.2 எனப் பதிவாகியுள்ளது.
தேசிய நில அதிர்வுகள் மையம் தெரிவித்துள்ள தகவலின்படி, இன்று அதிகாலை 5.21 மணிக்கு மேகாலயா மாநிலம் நொங்போ பகுதிக்கு வடகிழக்கே 33 கிமீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் 5 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட சேதங்கள் பதிவாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.